Tuesday, December 28, 2010

2010 பார்க்கவேண்டியது



2010 ஆண்டை கடந்துவிட்டோம். திரும்பி பார்க்கும் அனைவருக்கும் திரும்பிப் பார்க்க சம்பவங்கள் இருக்கும். முதல் முறையாக கல்லூரியில் சேர்ந்திருப்பீர்கள், காதலிக்க ஆரம்பித்திருப்பீர்கள், கல்யாணம் கட்டியிருப்பீர்கள், குழந்தை பிறந்திருக்கும், வேலைக் கிடைத்திருக்கும், வீடு வாகனம் வாங்கியிருக்கலாம், First day first show பார்த்திருக்கலாம், பதவி உயர்வு, Twitter, சிறு காயம், நட்பு, விபத்து, நல்ல கவிதை, தற்கொலை, பிரச்சனை, மாற்றல், அரசியல்,மன்னிப்பு என சிறுசும் பெருசுமாக நிறைய நடந்திருக்கும். அசை போட்டுப் பார்பதில் நம் அனைவருக்கும் அலாதி சந்தோசம்.

*****

நம் கவலைகளின் ஒரு பகுதியான பண பரிவர்தனைகளில் நம் நாட்டு பொருளாதாம், நம் பொருளாதாரம் எப்படி? நிலை உயர்ந்திருக்கிறதா? அலசிப் பார்போம்.

பங்குச் சந்தை

முதலில் பங்குச் சந்தை... அதன் செயல்பாடு 2009-ம் ஆண்டை போல ஆஹா, ஓஹோ (81% வளர்ச்சி) என்று இல்லாவிட்டாலும், 2008-ம் ஆண்டைப் போல் மைனஸாக (-52%) இல்லை என்பதே பெரிய ஆறுதல்தான். 2010-ம் ஆண்டு சென்செக்ஸ் 14.61%, நிஃப்டி 15.06% வருமானம் கொடுத்திருக்கிறது. இவை கிட்டத்தட்ட ஓராண்டுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட இரு மடங்கு அதிகம். அந்த வகையில் நல்ல லாபம்தான்!

இந்த ஆண்டு நம் பங்குச் சந்தை அள்ளியும் கொடுத்திருக்கிறது தள்ளியும் விட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பி.எஸ்.இ. ஆட்டோ, கன்ஸ்யூமர் டியூரபிள் இண்டெக்ஸ்கள் முறையே 112% மற்றும் 60% வளர்ச்சி கண்டன. ஆனால், பி.எஸ்.இ. ரியால்டி இண்டெக்ஸ் 29%, பவர் 9% வீழ்ச்சி அடைந்தன.

நம் சந்தை லாபத்தில் அதாவது எழுச்சியில் இருந்தால் காளையின் பிடியிலும், நஷ்டத்தில் அல்லது சரிவில் இருந்தால் கரடியின் பிடியில் இருப்பதாகவும் சொல்லுவோம். உண்மையில் பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிப்பவர்களாக முதலிடத்தில் இருப்பவர்கள் எஃப்.ஐ.ஐ-க்கள், அதாவது அந்நிய நிதி நிறுவனங்கள்தான்.

இந்திய பங்குச் சந்தையில் அவற்றின் நிகர முதலீடு 2009-ல் 80,500 கோடியாக இருந்தது. இது 2010-ம் ஆண்டில் 1,29,980 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களின் முதலீடு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பலரும் கருதுகிறார்கள். இது உண்மையாகும் பட்சத்தில் வரும்காலத்தில் சந்தை பாசிடிவ்- ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கச்சா எண்ணெய்

பொதுவா கச்சா எண்ணெய் விலை அதிகரிச்சா நம்ம பொருளாதாரத்துக்கும் பங்குச் சந்தைக்கும் நல்லதல்ல. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் விலைவாசியும் ஏறிவிடுகிறது. நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை நிச்சயம் அதிகரிக்கும். 2008ல் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை 91.48 டாலர். அந்த ஆண்டு சந்தை வீழ்ச்சி அடைந்தது. 2009ல் நல்ல வருமானம் கொடுத்தது பங்குச் சந்தை அப்போ கச்சா எண்ணையின் சராசரி விலை 53.56 டாலர். 2010ல் சராசரியாக 70 டாலர். அதிகபட்சம் 93 டாலர் வரை போனது.

பனை மரத்தில் நெறி கட்டும் கதைதான். நம் கைகளில் ஒன்றும் இல்லை. இதை ஒரு குறியீடாக வைத்துக்கொள்ளலாம், பங்கு சந்தையை கவனிப்பவர்கள்.

பணவீக்கம்

அதிகபட்சமாக பணவீக்கம் 16.22% ஆக இருந்தது. படிப்படியாக குறைந்து ஒற்றை இலக்கை எட்டியிருக்கிறோம். பணவீக்கத்தின் ஏற்ற இறக்கம் பங்குச் சந்தையில் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக பணவீக்கம் குறைவாக இருந்தால் சாதகம்.

ஜி.டி.பி. வளர்ச்சி மற்றும் தொழில் உற்பத்தி

2010-ம் ஆண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி சராசரியாக 8.9%, இந்திய தொழில் உற்பத்தி (ஐ.ஐ.பி.) வளர்ச்சி குறியீடு 11.64% பாஸிடிவ் சிக்னலைத் தான் தருகிறது.

கவலை அளிக்கும் விஷயங்கள்

வேலை இல்லாதவர்களின் சதவிகிதம் 7.32% ஆக இருந்து 8% ஆக அதிகரித்துள்ளது. உலக பொருளாதாரம் குறிப்பாக அமெரிக்காவோ ஐரோப்பாவோ ஆட்டம் கண்டால் நம்மை நிச்சயம் கவலை கொள்ளச் செய்யும். அவர்களின் நிலை கவலைக் கொள்ளவே செய்கிறது. பக்கத்து வீடு பற்றி எரிவது என்றால் நமக்கும் கவலைதானே.


தொடர்ந்து கற்றலும், அடிப்படை அறிவும் தேவை என்பதை இங்கு 'குறிப்பாக' சொல்கிறேன். வரும் ஆண்டில் ஸ்டீல், பார்மா, சிமென்ட் துறை நன்றாக இருக்கும். துறை முன்னோடி நிறுவனங்களை வாங்கலாம். முக்கியமாக, பங்குச் சந்தை தெரியாமல் இறங்க வேண்டாம். கவனம்.

இனி நாம் செய்ய வேண்டியது.

மேலே சொன்னது எல்லாம் நம் சக்திக்கு மீறியது. நம்மால் செய்யக் கூடியதில், நாம் என்னவெல்லாம் செய்யலாம்.

யோசிக்கலாம்.

Concentrate on your portfolio: பிரித்து போடுவது ரிஸ்க் அளவை குறைக்கும். ஆனால் பணம் சேர்த்தவர்கள் பிரித்துப் பிரித்து போடுவதில்லை. உம்: அஸிம் பிரேம்ஜி, ரத்தன் டாடா, பில் கேட்ஸ். அவர்கள் ஒரு துறையில் போட்டுதான் வளர்ந்தார்கள். உங்கள் portfolioவில் இருக்கும் நல்ல பங்கு தொடர்ந்து வளரும் போது, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பதும் நல்லதுதான். 1995ல் Tata Power வாங்கியிருந்தால் அதன் தொடர்ச்சியை கவனிக்கவும். லாபகரமானதாகவே இருக்கும்.

Ignore some rules: எதையும் எழுதி வையுங்கள். பெரும்பாலானவர்கள் அறிந்த '100 minus age' thumb rule. இதன் மூலம் கணக்கிடப் பட்ட %, பங்குச் சந்தையில் போடலாம். குழப்புகிறதா. உங்களுக்கு சரியெனப் படும் சதவிகிதத்தை தனியே ஒதுக்கிவிட்டு, மீதியை பங்குச் சந்தையில் போடுங்கள். தேவையில்லாத குழப்ப கணக்குகளை தூர எறியுங்கள்.

Get rid of niche plans: Don't go for Specific policies, such as child plans, pension plans, etc. நல்ல ரிட்டன் தரக்கூடிய Mutual fund ல் போடுங்கள். அதை எடுத்து குழந்தையின் படிப்பிற்கோ, முதுமைகோ நம் சௌகரியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். போடும் பணம் பொருக வேண்டும். அவ்வளவுதான்.

Get an adviser: பொரும்பாலும் நாம் பொற்றவர்களின் அறிவுரைப்படிதான் பண விஷயத்தில் நடந்து கொள்கிறோம். ஆரம்ப கட்டதில் அது சரி. போகப் போக அந்த துறை சார்ந்தவர்களின் ஆலோசனை கேட்பதே சரியானது. பாட்டி வைத்தியம் உடம்புக்கு ஓ.கே. ஆனால், அறுவை சிகிச்சைக்கு பட்டம் பெற்ற மருத்துவரே மிகச் சரியானவர்.

Surrender policies: தவறான முடிவின் பேரில் தேவை இல்லாத பாலிசியை சிலர் வைத்துக் கொண்டிருப்பார்கள். சிரமத்திலும் தொடர்ந்து கொண்டிருப்பார். அதை கணக்கு தீர்த்து தலை முழுகுங்கள். மனதளவில் அதன் நஷ்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒன்றும் குடி முழுகவில்லை. வாய்ப்பு நிறைய உள்ள கடல். படகை வேறு திசை திருப்பி வலை வீசுங்கள். புத்திசாலித்தனமாக முதலீட்டை ஆரம்பியுங்கள். இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணம், கண் முன்னே வளரும்.

Spend Analysis: செலவை கணக்கிடுங்கள். எவ்வளவு திறமையிருப்பினும் ஓட்டை படகு இடம் போய் சேராது. செலவை குறைக்கவாது செய்யலாம்.

*****

சேமிப்பு வேறு முதலீடு வேறு. உணர்ந்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக ஒன்று, முடிந்தால் சேமியுங்கள்.

முடியும்.
*****

வேறு பல விஷயங்களை மற்றொரு பொழுதில் பேசலாம்.

வாழ்த்துக்கள்.