Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Thursday, January 26, 2012

35வது சென்னை புத்தகக் காட்சி

என் முறை
*****
பூவேடு சேர்ந்து நாரும் மணக்கும்
Like the fiber which holds the flower, gets the fragrance of the flower.
*****


சென்னையில் 35-வது புத்தகக் காட்சி கடந்த 5 ஜனவரி 2012 வியாழன் தொடங்கியது. வழக்கம் போல் நண்பர்களுக்கு சொல்லிக் கொண்டேயிருந்தேன்... பல தடவை போய் வந்தேன். அரங்க உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளில், ஒவ்வொருமுறைக்கும் நல்ல முன்னேற்றம். வந்த நண்பர்களும் நிறைய வாங்கினார்கள்.

முதல் முறையாக தத்தமது ஜோடிகளுடன் வந்தவர்களும் வாங்கினார்கள். சிறு பரிசளிப்புகளில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம். தவறவிட்டவர்கள் அடுத்த ஆண்டு வாருங்கள். இம்முறை வந்தவர்கள் நிச்சயம் அடுத்த தடவை வருவார்கள். வர வைக்கும்!

பார்த்து பார்த்து வாங்கியதில் பட்டியல் கொஞ்சம் நீளம்...

வாங்கிய விவரம்




பகுதி ஒன்று

1. பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள், பாரதி புத்தகாலயம்.ரூ.50

2. ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி, காலச்சுவடு பதிப்பகம்.ரூ.175

3. குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட், காலச்சுவடு பதிப்பகம்.ரூ.125

4. பரத்தையருள் ராணி(கவிதைகள்) - லீனா மணிமேகலை, உயிர் எழுத்து பதிப்பகம்.ரூ.150

5. எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் - விந்தன், பாரதி புத்தகாலயம்.ரூ.70

6. ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு(கவிதைகள்) - ஜோமனா ஹத்தாத், உயிர்மை பதிப்பகம்.ரூ.70

7. சிறைப்பட்ட கற்பனை(சிறையிலிருந்து கடிதங்கள்) - வரவர ராவ், எதிர் வெளியீடு.ரூ.150

8. ஐரோம் ஷர்மிளா - க.சிவஞானம், நக்கீரன் வெளியீடு.ரூ.70

9. விழித்திருப்பவனின் இரவு - எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம்.ரூ.110

10. அன்டன் செகோவ் சிறுகதைகள் -தமிழில்: எம்.எஸ், பாதரசம் வெளியீடு.ரூ.90


பகுதி இரண்டு

1. மாப்பசான் கதைகள் - தமிழில்: சுரா, ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்.ரூ.55

2. ஷேக்ஸ்பியரின் மெக்பெத்(நாவல் வடிவம்) - ஜே.கே.இராஜசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,ரூ.140

3. முன்சுவடுகள்(சில வாழ்க்கை வரலாறுகள்) - ஜெயமோகன், உயிர்மை பதிப்பகம்.ரூ.75

4. போட்டித் தேர்வுகளுக்கான அறிவியல் கட்டுரைகள் - எஸ்.விஸ்வநாதன், (நக்கிரன்)ரூ.40

5. தீராக்காதலி - சாரு நிவேதா, உயிர்மை பதிப்பகம்.ரூ.80

6. ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம்.ரூ.200

7. பேசிக்கடந்த தூரம்(நேர்காணல், கேள்வி-பதில்கள்) -எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம்.ரூ.130

8. எப்போதுமிருக்கும் கதை (எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்), உயிர்மை பதிப்பகம்.ரூ.65

9. ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்(Outliers) - Malcolm Gladwell, விகடன் பிரசுரம்.ரூ.95

10. எக்ஸைல் - சாரு நிவேதா, கிழக்கு பதிப்பகம்.ரூ.250

பகுதி மூன்று

1. ஆனந்த விகடன் 'பொக்கிஷம்', விகடன் பிரசுரம்.ரூ.180

2. ஆனந்த விகடன் 'காலப் பெட்டகம்'(1926 முதல் 2000வரை...), விகடன் பிரசுரம்.ரூ.180

3. கடைசி டினோசார் - தேவதச்சன், உயிர்மை பதிப்பகம்.ரூ.85

4. அனுபவங்களின் நிழல் பாதை(பயணக் கட்டுரைகள்) -ரெங்கையா முருகன், வி.ஹரிசரவணன், வம்சி புக்ஸ்.ரூ.300

5. இந்தியா ஒரு வல்லரசு: வேடிக்கையான கனவு - அருந்ததி ராய், விடியல் பதிப்பகம்.ரூ.30

6. பெயரிடாத நட்சத்திரங்கள்(ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்), ஊடறு + விடியல் வெளியீடு.

7. உயிரினங்களின் தோற்றம் - சார்லஸ் டார்வின், விடியல் பதிப்பகம்.ரூ.65

8. ஜுதான்-எச்சில்(தலித் சுயசரிதை-இந்தி) - ஓம்பிரகாஷ் வால்மீகி, விடியல் பதிப்பகம்.ரூ.65

9. ஊரும் சேரியும்(கன்னட தலித் சுயசரிதை) - சித்தலிங்கையா, விடியல் பதிப்பகம்.ரூ.75

10. பதிற்றுப்பத்து - ஐங்குறுநூறு: சில அவதானிப்புகள் - ராஜ் கௌதமன், விடியல் பதிப்பகம்.ரூ.80

11. சங்கஸ் சித்திரங்கள் - ஜெயமோகன், தமிழினி.ரூ.110

வீடியோ:
இலக்கிய பேருரைகள்(7) - எஸ்.ராமகிருஷ்ணன், ரூ.600



ஜெயஸ்ரீ வாங்கியது

1. காவல் கோட்டம் - சு.வெங்கடேசன், தமிழினி.ரூ.650
(சாகித்ய அகாதமி விருது2011, கனடா தமிழ்ச் சங்க விருது)

*****
ரசித்தது:
http://karkanirka.org/ இங்கு சுவாரஸ்யமாக Tamil Proverbs தொகுத்திருக்கிறார்கள்,  உதாரணத்திற்கு:

குறையச் சொல்லி, நிறைய அள.
Tell the defect to get more quantity.

Explanation:
To point out the defect in the goods to make a good bargain
*****

அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும். - என்னவென்று இதை யோசியுங்கள்.

*****

Monday, March 21, 2011

நேற்று ஜப்பானில் நடந்தது...


***ஜப்பான் உணர்த்தும் பாடம்***

ஜப்பான் தனக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவைத் துணிவுடன் எதிர்கொண்டுள்ளது என்பது உண்மை.

ஆனால், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, எல்லோரையும் பயமுறுத்தும் அணுக் கதிர்வீச்சு அபாயம் என்று நிலைகுலைந்து போயிருக்கிறது. தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட நகரங்களிலிருந்து வெளியேறி 500 மைல்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள் பலர்.

சுனாமியால் ஆயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர். சுனாமியால் ஃபுகுஷிமா நகரிலுள்ள அணு மின் உற்பத்தி நிலையம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நிலையத்திலிருந்து 4 அணு உலைகளும் வெடித்துவிட்டன. இதனால் அங்கு கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டது. அணு மின் நிலையத்தில் மின்சாரம் இல்லாததால் அங்குள்ள குளிர்விப்பாங்கள்(Coolers) செயலிழந்துவிட்டன. தண்ணீர் சூழ்ந்திருப்பதால் அங்கிருக்கும் ஜெனரேட்டர்களையும் இயக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அணு உலைகள் வெடித்தன.

கடல் நீரைக் கொண்டு அணு உலைகளை குளிர்விக்க நடவடிக்கைகள் தீவிரப் படுத்தியும், இயக்க பொறியாளர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

*****

இது ஜப்பானின், இன்றைய சூழல். அணு மின் நிலையங்கள் மனிதனின் விஞ்ஞான வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக வர்ணிக்கப்பட்டு வந்தன. ஆனால் அணுசக்தியின் அபாயங்கள் எத்தகையவை என்பதை ஜப்பானைப் பார்க்கும்போதுதான் உணர முடிகிறது*.


இந் நிலையில் நம் நாட்டு பாதுகாப்பு பணிகள் எப்படி இருக்கின்றன என்பது தான் நூறு மில்லியன் டாலர் கேள்வி?

பதில் பார்போம்...

அணு உலை குறித்து பாதுகாப்பு அவசியம் என்று பிரதமர் கருத்து கூறியிருக்கிறார். இதை ஒப்புக்காகச் சொன்னதாகவே கருத்து கணிப்பில் (73.92%) மக்கள் நினைக்கிறார்கள்.


நிபுணர்களின் கருத்தும், இதை ஒட்டியதாகவே இருக்கிறது. உதாரணமாக - 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சுந்தர்ராஜன்,

''தமிழகத்தில், கல்பாக்கத்தில் ஓர் அணு உலை செயல்பட்டு வருகிறது. இந்த மார்ச் 31-ம் தேதி முதல் கூடங்குளத்திலும் அணு உலையைத் திறக்கிறார்கள். இதுவரை நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களில் இருந்தும் பெறப்படும் மின்சாரத்தின் அளவு வெறும் 4,385 மெகாவாட்தான். ஆனால், நமக்கான தேவையோ 1,70,000 மெகாவாட்! எனவே, 'பல்லாயிரம் கோடிகள் செலவழித்து குறைந்த அளவிலான மின்​​சாரம் ஏன் தயாரிக்க வேண்டும்?’ என்பதுதான் முதல் கேள்வி.


மரபு சாரா எரிசக்தி மூலம் அல்லது சூரிய ஒளியைப் பயன்​படுத்தியோ நாம் மொத்த நாட்டுக்கும் மின்​சாரம் பெற்றுவிட முடியும் என்கிற​பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகளை ஏன் எடுக்கத் தயங்குகிறது நம் அரசு?

கடந்த 2008-ல் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில், உலக நாடுகளில் இருந்து யுரேனியத்தையும், அணு உலைகளையும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

நம் நாட்டிலேயே 1,20,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக யுரேனியம் இருக்கும்போது, இறக்குமதி ஏன்? இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2020-ல் சுமார் 5 லட்சம் கோடி மதிப்பில் வியாபாரம் நிகழ்த்தப்பட இருக்கிறது. மேலும், உபயோகமான யுரேனியத்தை மீண்டும் உபயோகிக்கும்போது, அதில் இருந்து வெளிப்படும் கழிவுகளும் அதிகம் பாதிப்பைத் தரும்.

அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டு இருக்கும் இன்னொரு விஷயம்... இழப்பீடு. அணு விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு 1,500 கோடி இழப்பீடாகத் தர வேண்டும். ஆனால், இதில் 500 கோடியை மட்டும் அணு உலை நிறுவனங்கள் செலுத்தினால் போதுமாம். மீதித் தொகையை அரசே செலுத்துமாம். எத்தனை வருடங்கள் கழித்து விபத்து ஏற்பட்டாலும், இதே 1,500 கோடிதான் இழப்பீடு. ஆக, இதை எல்லாம் பார்க்கிறபோது, அணு மின் நிலையங்கள் என்பதே தேவை இல்லாத விபரீதங்கள்தான்!'' என்றார்**.

*****

ஜப்பானில் நம்பர் 1 பாதுகாப்பு என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்த அணு உலையிலேயே விபத்து ஏற்பட்டுவிட்டது.

வாழ்ந்து கெட்டவன் என்று நாம் பரிதாபப்படுவோம். விஞ்ஞானம் தரும் எல்லா சுகத்துக்கும் ஆசைப்பட்டவர்கள் ஜப்பானியர்கள். வசதியான வாழ்வு என்று நாம் கருதும் எல்லாமே அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள். ஒரு ஆழிப்பேரலை அத்தனையையும் அழித்துப் பல ஜப்பானியர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. எஞ்சி இருப்பவர்களை கதிர்வீச்சு அபாயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஒரு விபத்து நேர்ந்துவிட்டது என்பதற்காக அணு மின் சக்தி வேண்டாம் என்று கூறுவது முட்டாள்தனம் என்கிறார்கள் சிலர். அவர்கள் தங்களைப் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்களில் ஒருவராகச் சிந்தித்து, இந்தப் பிரச்னையை அணுகிப் பார்க்கட்டும். விடை கிடைக்கும்!

*****

பின் குறிப்பு:

*http://bit.ly/fXdsTP அணு மின்உலை பற்றி பத்திரிகையாளர் சுந்தர்ராஜனின் பதிவு.
** 20 மார்ச்2011, ஜூ.வி. பேட்டியில்.

Wednesday, October 6, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

நன்றி தினமணி.


ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்" உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா" 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா" வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: "ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''


படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ". "சந்திரலேகா" வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூறப்படுகிறார்!


ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக

"சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த்...


வரலாறுதானா 'சன் பிக்சர்'ஸின் "எந்திரன்"?

நிச்சயமாக "எந்திரன்" ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. 'சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான 'கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை 'எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்"டுக்கும் "கோகோ கோலா"வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர"ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் 'எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.


சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு 'எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட 'எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் 'எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக" (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, 'எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

'எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். 'எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் 'எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!
 
http://bit.ly/9hMsaO

நமது கருத்து, வரும் பதிவில்....

Sunday, August 29, 2010

ட்விட்டர் - ஓர் பார்வை



அறிமுகம்

ட்விட்டர் - இந்த வார்த்தை இணைய உலகத்தில் மிக பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த நாளில் இணையத்தின் சூப்பர் ஸ்டாராகத் தொடர்வது - சந்தேகம் இன்றி டிவிட்டர் (www.twitter.com).

புறாவிடு தூதாகத் தொடங்கிய தகவல் தொடர்பு, கடிதம், தந்தி, ஃபேக்ஸ், இ-மெயில் என முன்னேறி இப்போது சிட்டுகுருவியில் வந்து நிற்கிறது. எழுச்சியும், வீரியமும் கிடைக்க சிட்டுகுருவிகளை (!) லேகியத்திற்காக வம்பிழுத்துக் கொண்டிருந்த நமக்கு - இது புதுசு. பகலில் கண் சிமிட்டும் வெளிச்ச மத்தாப்பாய் - பல தொழில்நுட்ப நண்பர்களுக்கே தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது. ஆதலால், டிவிட்டர் என்றால் என்னவென்று முதலில் பார்த்துவிடலாம். இது வேற வகை 'சிட்டுகுருவி'.

"நமது கருத்தை, சொல்ல விரும்புவதைச் சிக்கன வார்த்தைகளில் இணையத்தில் தெரிவிப்பது".

நறுக்கென்று 140 எழுத்துக்களில் "இப்போது என்ன செய்கிறீர்கள் ?" என்பதை ட்விட்டரில் தட்டினால் அதை ஆயிரக்கணக்கானவர்களுக்கு நொடிகளில் கொண்டுசேர்க்கும் இந்த இணைய தொழில் நுட்பத்தை பல பிரபலங்கள் பயன்படுத்துகிறார்கள். தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கண்ட பிரபலம் பராக் ஒபாமா!

அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது துணை அதிபர் வேட்பாளரை அறிமுகப்படுத்துவது அங்கே மிகப் பெரிய மீடியா நிகழ்வு. 'செனட்டர் ஜோ ஃபைடனை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கிறேன்!' என ட்விட்டிவிட்டு சில மணி நேரங்களுக்குப் பின்தான் மீடியாவுக்கே அறிவித்தார் ஒபாமா. (நம் ஊரில் சினிமா பிரபலங்கள்தான் உள்ளனர்!.)

டிவிட்டரில் யார் வேண்டுமானாலும், எவருடைய டிவிட்டர் பக்கத்தையும் படிக்கலாம். இதில் இரண்டு விஷயம். 1.நீங்கள் படிக்கும் பக்கத்தின் சொந்தக்காரர் உங்களுக்குத் தேவையான தகவல்களை டிவிட்டியபடி இருந்தால், நீங்கள் அவரைப் பின்பற்றலாம் (Following). நீங்கள் பின்பற்றுபவரின் டிவிட்டுகள் உங்களது டிவிட்டர் பக்கத்தில் பிரசுரமாகும். 2.உங்களை யாராவது பின்பற்றினால் (Followers) அவர்களது டிவிட்டர் பக்கங்களில் உங்களது டிவிட்டுகள் பிரசுரமாகும். பை தி வே, Twitting என்பது வினைச்சொல்லாகவும், Tweet என்பது பொருட்சொல்லாகவும் பயன்படுத்தப் படுகிறது. Tweet என்றால் 'குட்டியான தகவல் பிட்' என்றால், Twitting என்பது மேற்படி பிட்டுகளை அனுப்புவது.

சரி, ஓரளவிற்கு புரிந்திருக்கும். இனி....

*****
கண நேர இணையம்
பாயின்ட் A-யில் இருந்து பாயின்ட் B-க்குத் தகவலைக் கொண்டு சேர்த்த தொழில் நுட்பங்களை ஒதுக்கிவிட்டு, சமநேரத்தில் (real time) அப்டேட் செய்ய முடிகிற தொழில் நுட்பங்களுக்குத்தான் இனி எதிர்காலம் என்கிறார்கள். (நன்றி அண்டன்). ஓவர்நைட் சக்சஸ் ஆன டிவிட்டர் இதற்கு நல்ல உதாரணம்.

எப்படி...? புரியும்படி பார்க்கலாம். அதற்கு முன் ஒரு குட்டியூண்டு Flash back.

இணையத்தை இரு மாபெரும் யுகங்களாகப் பிரிக்கிறார்கள். முதல் யுகமான இணையம் 1.0-ல் தகவல்கள் (data) வலைத்தளப் பக்கங்களில் கொடுக்கப்பட, நீங்கள் அவற்றைப் படித்துத் தகவல்களை எடுத்துக்கொண்டீர்கள் (Static). கிடைத்த தகவலை வைத்து எதிர்க் கேள்வி கேட்பதோ, பின்னூட்டம் இடுவதோ, கலந்துரையாடுவதோ சாத்தியமில்லை. கிட்டத்தட்ட நூலகம் சென்று புத்தகம் படிப்பது போன்ற ஒரு சாதாரண மீடியாவாகவே இருந்த இணையம் 2001-ல் புது வடிவம் எடுக்க ஆரம்பித்தது.

இணையம் 2.0 என அழைக்கப்படும் இந்தப் புதிய யுகம், எல்லோரையும் ஒருங்கிணைக்க ஆரம்பித்தது. வலைப்பதிவுக் கலாசாரம் தொடங்கப்பட்டது; விக்கிகள் முளைத்தன; மின்னல் வேகத்தில் பின்னூட்டங்கள் இடப்பட்டன; (Dynamic). சமூக நெட்வொர்க்கிங் தளங்களில் படங்களும், வீடியோக்களும் அப்லோட் செய்யப்பட்டு நண்பர்களுடன் பகிரப்பட்டன. கீ-போர்டு தட்டுவதையும் தாண்டி அலைபேசியிலிருந்து நொடிக்கு நொடி ட்விட்டத் தொடங்கினர்.

Flash back ஒவர். இதில், முன்பு சொன்ன கண நேர இணையம் (Real Time Web) எங்கே, எப்படி வருகிறது ?

சொல்கிறேன்.

தேடல் இயந்திர (Google, Yahoo) நிறுவனங்களுக்கும், சமூக வலைதள நிறுவனங்களுக்கும் (Facebook,etc) ஆதார சுருதி விளம்பரங்கள்தான். ஆனால், இந்த இரண்டு தரப்பினரும் பின்பற்றும் டெக்னிக்குகள் வித்தியாசமானவை.

தேடல் இயந்திரங்களின் மிகப் பெரிய சவால், லேட்டஸ்டான தகவல்களைத் தேடல் முடிவுகளில் முதல் பக்கத்தில் கொண்டுவருவது. கூகுளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு, கூகுள் சாதாரண வலைதளங்களைவிட, வலைப்பதிவுப் (Blogs) பக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தெரிய வரும். வலைதளங்களைவிட வலைப்பதிவர்கள் தகவல்களை வேகமாகப் பிரசுரிக்க முடியும் என்பதால் இந்த முக்கியத்துவம். திறம்பட வேகமாகத் தொகுக்கும் திறன் மட்டுமல்லாது, பொருத்தமான தளங்களை ஒரு தேடல் தளம் அடையாளம் காட்டுவது பயனீட்டாளர்களுக்கும் முக்கியம். அவர்களுக்குப் பொருத்தமான (Targeted Advertisements) விளம்பரங்களை அளிக்க விரும்பும் விளம்பர ஸ்பான்சர்களுக்கும் முக்கியம்.

ஆனால், சமூக வலைதள நிறுவனங்களில் (Social Network) இருந்து பயனீட்டாளர்களும், விளம்பரதாரர்களும் எதிர்பார்ப்பது சற்றே வித்தியாசமானது. தனது நட்பு வட்டாரத்தின் (Social graph) செயல்பாடுகளை உடனுக்குடன், தெரிந்துகொள்வதை பயனீட்டாளர் விரும்புகிறார் என்றால், இந்த நட்பு வட்டாரத்தின் மத்தியில் நடக்கும் உரையாடல்களையும், பரிமாறிக்கொள்ளப்படும் புகைப்படம், வீடியோக்களையும் புரிந்துகொண்டு, அதற்குத் தகுந்த பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட விளம்பரதாரர் விரும்புகிறார்.

ஓர் எளிய உதாரணம்...,

'இன்னும் இரண்டு வாரத்தில் விடுமுறைக்கு லண்டன் செல்கிறேன்!' என்று நட்புவட்டத்துக்கு நீங்கள் ஃபேஸ்புக்கில் எழுதிவைத்தால், லண்டனில் வாழும் உங்கள் நண்பர்கள் சில ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடும். அது உங்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆனால், விளம்பரதாரர்களுக்கோ, உங்களது வலைப்பக்கத்தில் லண்டனில் தங்கும் விடுதி, வாடகை கார் போன்றவற்றின் விளம்பரங்களைக் காட்டுவது பயனுள்ளது. ஆக, நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை எவ்வளவு விறுவிறுப்பாக கிரகித்துக்கொள்ள முடியுமோ, அந்த சமூகத் தளங்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். அதனால்தான், ஃபேஸ்புக் நிறுவனம் இந்தத் தளத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

பல லட்சம் பேர் இப்படித் தங்கள் மனதில் இருப்பதை எழுதியபடி இருப்பதைக் கிரகித்தால், மக்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் வெளிப்படும். என்ன விஷயங்கள் முக்கியமாகக் கருதப்படுகிறது என்ற உண்மை வெளிப்படும். இதில், கண நேர இணையத்தின் நோக்கம், நட்பு வட்டாரத்தின் உரையாடல் மட்டுமல்ல... இணையத்தின் பயனீட்டாளர் எவருடைய தகவல்களையும், அந்த நொடிப் பொழுதில் தேடித் தர முடிகிற இந்த Concept தான் டிவிட்டரின் Secret of Success !. கண நேர இணையத்தில் இருக்கும் தகவல்கள் ரொம்பவே முக்கியம். உதாரணமாக, திரைப்படம் ஒன்றை ரிலீஸ் செய்த அன்றே, அந்தப் படம் வெற்றியடையுமா, தோல்வி அடையுமா என்பதை டிவிட்டுகளைத் தேடிக் கண்டறிய முடியும்.

நான் சொல்ல வந்தது இதைத்தான். இதன் சாத்தியங்கள் யோசித்தால், ஆச்சரியங்களைக் கொடுக்கும். பல மில்லியன் டாலரையே கொடுத்திருக்கிறது - கொட்டிக் கொண்டும் இருக்கிறது !.

*****
என் ட்விட்டர் முகவரி @JSurendhar

சில ட்விட்டர் சுவாரஸ்யங்களும்,



மேலும் அறிய
 
 
 

சில வலைத்தள சேவைகள்

பிரபலமான டிவிட்டர் உரலிகளைத் தொகுத்து அளிக்கும் தளம்: www.tweetmeme.com
டிவிட்டரில் உங்களைப் பின்பற்ற (followers) ஆட்களைப் பிடிக்க வேண்டுமா? மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஸ்டைலில் உதவுகிறது - www.twitproquo.com/

*****

கடைசியாக ஒர் வார்த்தை, இந்தக் களத்தில் குதித்திருக்கிறது கூகுளும்தான். கூகுள் வெளியிட்டிருக்கும் கண நேர இணையத்தின் பெயர் பஸ்ஸ் (http://www.google.com/buzz/).

இன்னென்றும் இருக்கிறது.

அதன் பெயர் "டம்ளர்" !.  

Saturday, July 10, 2010

செம்மொழி மாநாடு - நம் பார்வை II


செம்மொழி மாநாட்டு ஆரவாரமெல்லாம் முடிந்து, தமிழர்கள் தத்தமது வேலைகளில் இறங்கிவிட்டனர். ஆட்சியாளர்கள் கட்சி பணி பார்க்கவும், நாமெல்லாம் மற்றுமொரு உலக கோப்பையை பார்க்க - ஆக்டோபஸ்ஸின் உதவியோடு - நகம் கடித்து துப்ப தொடங்கியிருக்கிறோம்.

களிமண், கல்வெட்டு, ஓலை, காகிதம் தாண்டி கணினியிலும் பட்டொளி வீசிப் பறக்கும் தமிழ்க் கொடியை இன்னும் உயரே தூக்கிப் பிடிக்கும் நோக்கில், செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது!பேசும் மொழிக்காக இத்தனை லட்சம் பேர் கூடுவார்கள் என்ற ஒன்றே கோவை மாநாட்டுக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமை.

கொஞ்சம் அருகில் சென்று, நுரை தள்ளி தண்ணீர் அள்ளி பார்ப்போம்.

*****

மொழியியல் சார்ந்த உலக மேதைகளும் உள்ளூர் அறிஞர்களும் ஒன்றாகச் சேர்ந்து தங்களது ஆய்வு முடிவுகளை, இது வரை இருக்கும் ஆதாரங்களை நினைவுபடுத்துவதும், அடுத்த கட்டமாகத் தங்களது ஆய்வை எதை நோக்கிச் செலுத்துவது என்று முடிவு எடுக்கவுமே ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கோவையில் நடந்த ஆய்வரங்குகள் இதில் எந்த நோக்கத்தையும் நிறைவு செய்ததாகத் தெரியவில்லை.

ஆய்வரங்க நிகழ்வுகளில் கருணாநிதி பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்கூட யாரையும் நெருட வில்லை. அவர் மகள் கனிமொழி பற்றியும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில்... தமிழறிஞர்களுக்கு முகச்சுளிப்பு!

கனிமொழி பற்றி மூன்று தலைப்புகளில்! அந்தக் கட்டுரைகளின் பொருளடக்கமும் சரி... சமர்ப்பித்தவர்களின் விஷயஞானமும் சரி... அந்த அரங்கத்திலேயே காற்று இறங்கிப் போனது இன்னும் சோகம்! நல்ல வேளை பொது மக்களை பார்க்க அனுமதிக்கவில்லை (!).

ஒர் உதாரணம் பார்ப்போம்.

'கவிஞர் கனிமொழியின் கவிதைகளில் பெண் மன உணர்வுச் சித்திரிப்பு' என்ற தலைப்பில் வெ.கலைச்செல்வி என்பவர் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அங்கீகரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கேள்வியாளர்கள் மொத்தமே 10 பேர்தான் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து, 'கனிமொழி எத்தனை கவிதைத் தொகுப்புகள் எழுதி இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என முதல் கேள்வியைப் போட்டார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் கொஞ்சம் நேரம் தயங்கி, எதையோ யோசித்த போஸில் நின்றார் கலைச்செல்வி.கேள்வி கேட்டவரே கனிமொழி எழுதிய மூன்று புத்தங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ''அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் எப்படி ஆய்வுக் கட்டுரை எழுதினீர்கள்?' என்று மடக்கினார்.

''நான் 'கருவறை வாசனை' பற்றி மட்டும்தான் ஆய்வு செய்தேன்!' என்று சமாளித்தார் கலைச்செல்வி. இதில் சமாதானம் அடையாத கேள்வியாளர், 'ஆய்வு என்பது சம்பந்தப்பட்டவருடைய எல்லா எழுத்துகளையும் படித்துவிட்டு அவற்றில் இருந்து நீங்கள் அறிந்துகொண்டதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, பொத்தாம் பொதுவான கட்டுரையாக இருக்கக்கூடாது!' எனச் சொல்ல, கலைச்செல்வியின் முகம் இருண்டது.

*****
பெ.பகவத் கீதா 'கனிமொழியும் கவிதைமொழியும்' என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வைத்தார். இந்த ஆய்வுக்கும் சரமாரி கேள்விகள்! முதலில் எழுந்த ஒரு கேள்வியாளர், 'கருவறையின் வாசத்தை ஆண்கள் உணர்ந்தது இல்லையா? ஆண்களைப்பற்றியும் கனிமொழி எழுதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 'சிகரங்களில் உறைகிறது காலம்' என்ற புத்தகத்தில் தந்தையரைப் பற்றியும் அவர் பாடி இருக்கிறாரே..?' என்று அடுக்கிக்கொண்டே போனார் கேள்விகளை. பகவத்கீதா, 'நான் பெண்மை தொடர்பான விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அவ்வளவுதான்!' என்றார். அடுத்து பழனிசாமி என்பவர் எழுந்து, 'உங்கள் ஆய்வுக் கட்டுரை முழுக்கப் பாராட்டு மழையாக அல்லவா இருக்கிறது. நடுநிலையான விமர்சனம் எதுவும் இல்லையே? கனிமொழியின் படைப்புகளில் இருக்கும் முரண்பாடுகள் பற்றி நீங்கள் எதையும் குறிப்பிடவில்லையே... ஏன்?' என ஒன்றுக்குள் ஒன்றாகப் பல கேள்விகளை அடுக்க, 'அவையடக்கத்தின் காரணமாக, அதுபற்றி எல்லாம் ஆய்வு செய்யவில்லை!' என்று பகவத்கீதா பதில் சொன்னாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு அரங்கமே ஒரு நிமிடம் அமைதி காக்க, 'ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கும் அவையடக் கத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே புரியவில்லையே?'' என்று இன்னொரு கேள்வியாளர் அரங்கத்தின் அமைதியைக் கலைத்தார். தொடர்ந்து அவரே, ''எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய நன்மை - தீமையை அலசி ஆராய்ந்து சொல்வதுதான் ஆய்வுக் கட்டுரை! ஒருவரைப் பாராட்டி எழுதுவது ஆய்வுக் கட்டுரையே இல்லை. அதை வெறும் கட்டுரை என்றுதான் சொல்ல முடியும்!' என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினார். நல்ல வேளை இந்தக் கேள்விக்கு பகவத்கீதா பதில் சொல்ல அரங்கத் தலைவர் கனல்மைந்தன் அனுமதிக்கவில்லை. காரணம் நேரமின்மைதான்! (ஜு.வி யில் (04-07-2010) விரிவாக வந்திருக்கிறது.)

*****
கிளம்பிற்றுகாண் ஜால்ரா கூட்டம்!

என விகடன் கொட்டு வைக்கும் அளவுக்கு சத்தம் அதிகம்.

அதே கவிஞர்கள், அதே கூட்டம் சூழ்ந்திருக்க, நடுநாயகமாக வீற்றிருக்கிறார் முதல்வர். 'யாரங்கே... தொடங்கட்டும்' என ஆரம்பமாகிறது கவியரங்கம்...

"கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களைவிட, ஈரப் பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால், கோபாலபுரம் வீட்டை கொடையாகத் தர முடியுமா?, அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால், அதியமான் ஏமாந்திருப்பான்!" என்றெல்லாம் கவிதை மழை. சொன்னது ஈரோடு தமிழன்பன்.

வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்கள் மேல் நமக்கு தனிபட்ட பகையில்லை. கேட்பவர்களுக்கும் சில வேளை கூச்சம் வரலாம் என்பதே நமது கருத்து! வேறென்ன சொல்ல?

*****
கண்காட்சிக்கு ஜெ !

அந்த அரங்கத்துக்குள் நுழைந்தால், சிந்துச் சமவெளிக்குள் பயணிப்பதுபோலவே இருந்தது. மொகஞ்சதாரோ - ஹரப்பா நாகரிங்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் இருந்த எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களே என்று நிரூபிக்கப்பட்டதால், அந்த எழுத்துக்களில் தொடங்கி, அங்கே இருந்த வீடுகள், கிணறுகள், அம்மக்கள் பயன்படுத்திய பொருட்களின் சிதைவுகளை மாதிரியாகச் செய்துவைத்து இருந்தார்கள். ஓலைச் சுவடிகளை ஊர் ஊராக அலைந்து திரிந்து கைப்பற்றி புத்தகங்களாகப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதய்யர். அவர் வைத்து இருந்த திருக்குறள், புறநானூறு, சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களின் ஓலைச் சுவடிகள், அதை எழுதப் பயன்படுத்திய எழுத்தாணிகள் வைக்கப்பட்டு இருந்தன. புராதனச் சிலைகள், தமிழர் வாழ்க்கையைக் காட்டும் ஓவியங்கள், பழைய காலத்துத் தமிழ் எழுத்துக்கள் என எல்லாமே பழமையை நினைவுபடுத்துவதாக இருந்தன. இலக்கியக் காட்சிகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட 3டி அனிமேஷன் காட்சிகள்கொண்ட ஒலி - ஒளி கண்காட்சி அரங்கம் அருமை! (கண்காட்சி வருணனை - ஆ.வி., நன்றி)

அறுதலான விஷயம், 'தமிழிலேயே பாடம் படித்தால், தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை'. அச்சுத் துறையில் கணினித் தமிழை உலகளாவ ஒருமுகப்படுத்தும் விதமாக, 'யூனிகோட்' மற்றும் 'டிஏசிஇ-16' ஆகியவற்றை ஆரத் தழுவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் அனைவரும் ஒரே எழுத்துருவில் படிக்கலாம் இனி!

 'டிஏசிஇ-16' புரியாதவர்களுக்கு வேறொரு சந்தர்பத்தில் சொல்கிறேன்.

*****
தமிழுக்கு இவை மட்டும் போதுமா? இன்னும் செல்வதற்கும் செய்வதற்கும் எவ்வளவோ இருக்கின்றன!

யானைக்கு சோள பொரி. என்ன! இந்த பொரி அவிக்க, 380 சொச்சம் கோடி தேவைப் பட்டிருக்கிறது!

Tuesday, June 29, 2010

செம்மொழி மாநாடு - நம் பார்வை I


நாடாளுபவரின் நிறைவேறாத பெருங்கனவாக இருந்ததை, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தி தற்போது நிறைவேற்றியுள்ளார் கலைஞர்.
திராவிட இயக்கத்தில் ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திவிட்டனர்.


நமது கருத்துக்களை பகிரும் முன் - மாநாட்டுத் துளிகள் - உங்களுக்காக!


செம்மொழி மாநாட்டிற்காக போய் இறங்கியதும் ஜில்லென்று இருந்தது ஊர்.

"செம்மொழி மாநாடு நடக்கும் ஐந்து நாட்களுக்கும் சேர்ந்து ஆறு லட்சம் பேர் வருவார்கள்!" - இப்படித்தான் கணக்குப் போட்டிருந்தார்கள் போலீஸ் புலனாய்வுத்துறை அதிகாரிகள். அவர்கள் போட்ட கணக்கு தப்பாகி விட்டது. முதல் நாளே ஆறு லட்சத்தைத் தாண்டியிருக்கலாம். அந்த அளவுக்கு கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டம்.


கோவை மாநகருக்குள்ளும், மாநகரைத் தொட்டும் மாநாட்டை ஒட்டி பல்வேறு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலைப்பணிகள் மேற்கொள்ள சுமார் 60 கோடிக்கு அரசாணை பெறப்பட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன.

மாநாட்டில் கலந்துகொள்ள ஒருநாள் முன்னதாகவே ஜனாதிபதியும் வந்து விட்டார்.

மாநாட்டிற்கு வந்த நடிகர்கள் பாடு படுதிண்டாட்டம். நடிகர் சிவகுமார், பிரபு, விஜயகுமார், பிரகாஷ்ராஜ், தியாகு போன்றவர்கள் கேலரியில் 'கலைஞர்கள்' என்று எழுதப்பட்ட ஒரு கோடியில்தான் அமர வேண்டியிருந்தது. அங்கிருந்து பார்த்தால் மேடையே தெரியாத நிலை. மின்விசிறி வேறு இல்லை. அழைப்பிதழையே விசிறிக் கொண்டனர். (மற்றொரு நாள் இந்த பகுதியில்தான் நாம் அமர வைக்கப்பட்டோம் !).

பிரகாஷ்ராஜ் வரும்போது அவரை யார் என்று தெரியாமல்(!) ஒரு பாதுகாப்பு போலீஸ்காரர் தடுத்து தள்ளியது தனிக் கதை.


மாநாட்டு பட்டிமன்றம் முடிந்த போது வெளியே கட்டுக்கடங்காத மக்கள் கடல். அதை நீந்தி கடந்து செல்ல ஒரு கி.மீ.க்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆயிற்று.


நாம் பார்த்த பிரபலங்கள். வாலி, வைரமுத்து, சிவக்குமார், வடிவேலு, பாரதிராஜா, சந்திரசேகர் (விஜய் அப்பா அல்ல), எஸ்.வீ.சேகர், லியோனி, நக்கீரன் கோபால், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், சாலமன் பாப்பையா, மனுஷய புத்திரன், மற்றும் அறிஞர் பெருமக்கள்.

மாநாட்டு மைய நோக்கு பாடல் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது, டிவியிலும், பெரிய திரையிலும் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு தமிழ் அலை பரவ மிக முக்கிய காரணமாய் இதைக் குறிப்பிடலாம்.

உணவில் 'சுவை, தரம் முக்கியம்' என்பது முதல்வரின் கறார் கட்டளையாம். ரூ.30-க்கு சாப்பாடு விநியோகிக்கப்பட்டது. ஒரு வெரைட்டி ரைஸ், ஒரு தயிர் சாதம், ஒரு பாட்டில் தண்ணீர், ஊறுகாய், இனிப்பு, சிப்ஸ் இருந்தது. (அதை 'ஊசி, புளித்துப் போன சாப்பாடு, விலையும் அதிகம்' என்று திட்டிக்கொண்டே சிலர் சாப்பிட்டனர்.)

கழிவுகளைக் கொட்ட 660 குப்பைத் தொட்டிகள் மாநாட்டு திடலில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன. சாதாரணக் காய்ச்சலில் துவங்கி விபத்து வரை எவ்வகையான உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட்டாலும், விரைந்து சேவையாற்ற நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் தயார் நிலையில். வி.ஐ.பி-க்களுக்கு என ஸ்பெஷல் ஏற்பாடுகளுடன் அதி நவீன மருத்துவ வாகனங்கள்!

மாநாடு முழுக்க டாய்லெட் வசதி ஏற்படுத்திக் கொடுத்து பெண்களின் புண்ணியத்தை கட்டிக்கொண்டனர். பெண்களிடம் முகச்சுழிப்பில்லை. பஞ்சமில்லாமல் தண்ணீர் வசதி செய்து கொடுத்தார்கள். ஆண்களில் சிலர் வசதியை புறக்கணித்து இயற்க்கை அழைத்த போதெல்லாம் சுவர் ஓரம் ஒதுங்கினர்!.

தமிழ்க் கணினி இணைய கண்காட்சி நடந்தது. 123 அரங்குகளில் மத்திய, மாநில அரசுத் துறை சார்ந்த 123 இணைய தளங்கள் இடம்பெற்றன. இந்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகமும் இதில் பங்கேற்றது. இதன் சார்பில் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு யூனிகோட் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய ஒரு லட்சம் சி.டி-க்கள் இலவசமாக வழங்கப்பட்டது. கண்காட்சியில் பங்கேற்கும் மற்ற நிறுவனங்களும் தங்களது தமிழ் மென்பொருட்கள் அடங்கிய சி.டி-க்களை இலவசமாக வழங்கின. (நாம் கேட்ட லினக்ஸ் சிடி பெற, அரை மணி கழித்து வர சொன்னார்கள். மெயில் ஐடி, செல் நம்பர் கொடுத்து வந்தேன், இது வரை தொடர்பில்லை!)

புத்தக கண்காட்சியிலும் பெரும் கூட்டம். சிந்து சமவெளி மற்றும் பல பெருமைகள் விளக்கும் கண்காட்சியிலும் கூட்டம். அவசியம் குழந்தைகளும் பெரியவர்கள் காண வேண்டியது.

லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கவில்லையோ போலும். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களை பல்லாயிரக்கணக்கில் வரவழைத்திருந்தனர். கூட்டத்தில் அந்த பெண்கள் சிக்கி சங்கடப்பட்டனர். கஷ்டமாக இருந்தது. (யாருக்கு என்று கேட்காதீர்கள் !)


கட்சிக் கரை வேட்டியினரை வெகு அரிதாகத்தான் விழாவில் காணமுடிந்தது. நாம் பார்த்த வரை, நகரில் எந்த மூலையிலும் தி.மு.க பேனர்களையோ, போஸ்டர்களையோ காணமுடியவில்லை. கட்சி நிர்வாகிகள் ஆச்சரியப்படுத்தினர். பாராட்டலாம்.

ரத ஊர்வலத்தை தொடங்கி வைக்க (லக்ஷ்மி மில்ஸ் சந்திப்பு) வந்த கனிமொழி, அங்கு நின்றிருந்த நாதஸ்வரம், கரகாட்டப் பெண்கள், ஆண்களிடம், "ரொம்ப நேரமா நிற்கிறீங்களே. கால் சுடுமே. உட்கார்ந்துகொள்ளலாமே?" என்றார். அவர்களோ, "நாங்கள் நாள்கணக்கில் இப்படி நின்றாலும் எங்களுக்குக் கால் சுடாது. வலிக்காது. கடவுளிடம் அப்படியொரு வரம் வாங்கி வந்திருக்கிறோம்" என்று கூறி அசத்தினர்.

ஸ்டாலினும் கனிமொழியும் விழா முழுக்க ஜொலித்தனர். நமது பத்திரிக்கைகளும் இதை சிலாகித்தது.


இந்த லட்சோப லட்சம் மக்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஒரு பெண்மணி பேசி வந்த வார்த்தைகள் இதுதான். "அடுத்த தடவையும் தேர்தல்ல கருணாநிதிதான் வருவார் போலிருக்கு!"

தொடரும்.....

Sunday, June 20, 2010

என்றுமுள தமிழ்



தமிழ் மொழியையும், நம்மையும் பெருமையுறச் செய்த தமிழறிஞர்கள் பலர். இவர்களைப் பற்றி பிறகு.


******

செம்மொழி என்ற வார்த்தை திடிரென்று நம் எல்லோருக்கும் பரிச்சயம் ஆகியிருக்கிறது. கோவை செம்மொழி மாநாட்டு செய்திகள் நம்மை வந்து சேருவதற்கு எல்லா வழிகளிலும் அரசாங்கம் முயன்று, வெற்றியும் பெற்றிருக்கிறது. இதில் அரசியல் பார்க்கத் தேவையில்லை. மொழி வளர்ச்சிகான வாய்பாக இதைப் பார்க்கலாம்.

Friday, June 18, 2010

2010 இயர் அப்ரைசல்



ஒரு அலசல்:

தி.மு.க அரசு - யாருக்கு எவ்வளவு மார்க்?

சிறந்த மற்றும் மோசமான அமைச்சர்கள் யார், யார்?

தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சிகள் தந்த மார்க் எவ்வளவு? என இந்தியா டுடே (ஜுன் 23,2010) கவர் ஸ்டோரி வெளியிட்டு இருக்கிறார்கள்.

தி.மு.க அரசின் அமைச்சர்களின் சாதனைகள் தோல்விகள் தர்மசங்கடங்களை அலசி இருக்கிறார்கள்.

தரப் பட்டியலில் 29 அமைச்சர்களுக்கு மதிப்பெண்(%) கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல்வருக்கு 64% ஸ்டாலின் 63% அன்பழகன் 55% தந்திருக்கிறார்கள். முதல் முறை அமைச்சர்களில் வெகு சிலரே திருப்திகரமாகச் செயல்பட்டுள்ளனர்.

புள்ளிவிவரங்களுடன் அணுகினால் தமிழகம் ஒன்றும் இந்தியாவின் முதன்மையான மாநிலமாகத் திகழவில்லை. இப்போது தமிழகத்தின் கடன் ரூ.75,000 கோடி. தரப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. விவசாயத்திலும் மூன்றாமிடம்தான். ஆரம்ப சுகாதாரத்தில் நான்காவது இடம். உள்கட்டமைப்பில் ஆறாவது இடம்.

இலவசங்கள், மானியங்களுக்காக மட்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் போடப்பட்டுவருகின்றன. இது சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் உயரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. கருணாநிதி, எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.கவை பல வகைகளிலும் பலவீனமாக்கியிருக்கிறார். பதவி கேட்டுப் போராடிய காங்கிரசை அடக்கியும், ஆதரித்துக் கொண்டே எதிர்ப்பு அரசியலை நடத்தும் பா.ம.கவை ஓரங்கட்டியும் ஓர் அரசியல் தலைவராக சிறந்த ராஜ தந்திரியாக செயல்பட்டிருக்கிறார்.

ஆனால் அது மட்டும் போதாதே, தமிழகத்தை முதலிடத்தில் வைக்க. மின் பற்றாக்குறை இல்லாத, குடிதண்ணீருக்குப் பஞ்சம் இல்லாத, விலைவாசி கட்டுக்குள் இருக்கிற, நாளொரு கொலை, பொழுதொரு கொள்ளை இல்லாத, தொழில் வளம் மேம்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகியிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இலவசம் இனி தேவையில்லை என்கிற சூழலுக்கு தமிழகம் வந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் முதலிடத்தை பிடித்திருக்க முடியும்.

******

நமது மதிப்பீட்டை ஒப்பிட்டு பார்க்கலாம்.

தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆர்வமிருப்பின் படித்துப்பாருங்கள்.

******

நான் ரசிச்ச 'பாசம்' கவிதை -- ரசிச்ச கேள்வி பதில்
                                                                                      
                                                               


Thursday, June 10, 2010

ஜோதிகாவும் குட்டி ஆப்பிளும்



பக்கத்தில் இருக்கும் குழந்தையை யார் என்று தெரியவில்லையென்றால், நீங்கள் தமிழ் சினிமாவை விட்டு வெகு தூரம் தள்ளி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இந்த பாப்பாவுக்கு ஒரு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான்.

ஆம். சூர்யா ஜோதிகாவுக்கு ஒரு மகன் பிறந்ததுதான் இப்போதைய கோடம்பாக்க லேட்டஸ்ட். பத்திரிக்கைகளில் செய்திச் சொல்லி ரசிகர்கள் இனிப்பு கொடுத்தார்கள். பாதகம் யாருக்கும் இல்லை என்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி.
*****

மத நம்பிக்கையிலும், பழமொழியிலும், வரலாற்றிலும் இடம் பெற்ற ஒரு பழம். ஏவாள் முதலில் கடித்து ஆதாமிடம் கொடுத்தது. தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவனை தள்ளி வைக்கலாம் என - நமக்கு வெகுவாக பரிச்சயம் ஆனதுதான். அறிவியல் கண்டுபிடிப்புக்கு உதவியதில் தான் சுவாரஸ்யம்.

நாம் அறிந்திருப்பதைப் போல் புவிஈர்ப்பு விசை தத்துவத்தை கண்டுபிடித்தவர், இங்கிலாந்து விஞ்ஞானி ஐசக் நியூட்டன். அவர் ஓர் ஆப்பிள் மரத்தடியில் படுத்து இருந்தபோது, மரத்தில் இருந்து ஒரு ஆப்பிள் கீழே விழுந்ததை வைத்து இந்தத் தத்துவத்தை கண்டுபிடித்தார்.”மேலே எறியப்படும் எல்லாப் பொருளும், புவிஈர்ப்பு விசை காரணமாக கீழே வந்தே தீரும்” என்றார். அந்த ஆப்பிள் மரத்தை, லண்டனில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

இந்த ஆப்பிள் மரத்தில் இருந்து 4 அங்குல நீளத்துக்கு ஒரு பகுதியை வெட்டி எடுத்து, விண்வெளிக்கு கொண்டு சென்றார்கள். போன மாதத்தின் ஒரு நாளில் நாசா, விண்வெளிக்கு அனுப்பிய அட்லாண்டிஸ் விண்கலத்தில், இந்த மரத்துண்டையும், நியூட்டன் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு 6 விண்வெளி வீரர்கள் சென்றார்கள்.

“விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது என்பதால், அங்கு இந்த மரத்துண்டு கீழே விழாமல் அந்தரத்தில் மிதக்கும். இதனால் விண்வெளியில் நியூட்டனின் ஈர்ப்பு விசை விதி செல்லாது என்பதை அவருடைய ஆப்பிள் வைத்து நிரூபிக்கப்போகிறோம்” என்றார் அதை எடுத்துச் சென்ற விண்வெளி வீரர்.

விண்வெளி பயணத்தை முடித்த பிறகு, அந்த மரத்துண்டும், நியூட்டன் புகைப்படமும், லண்டன் ஆவணக்காப்பகத்தில் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. “நியூட்டன் உயிரோடு இருந்தால்கூட, விண்வெளியில் தனது விதி பொய்யாகும் அதிசயத்தை காண விரும்புவார்” என்று விண்வெளி வீரர்கள் வேடிக்கையாக கூறினார்கள்.

*****

நம்மில் எத்தனை பேர்களுக்கு இந்த விஷயம் தெரியும். இதை பத்திரிக்கைகளும் இங்கு சொல்லவில்லை. சினிமா சார்ந்த செய்திகளே போதும் என்று விட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. நித்தியானந்தாவின் படுக்கையில் கிடைத்த சுவாரஸ்யம் உலக நடப்புகளில் கிடைப்பது இல்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம். விஞ்ஞானத்தை வேப்பங்காய் ஆக நினைக்காமலும், விளையாட்டு சினிமா தாண்டியும் நாம் வர வேண்டிய தூரம் நிறைய.

பின் வரும் ஒர் நாளில் நம் மெயில் பாக்ஸ் நிரப்ப அந்த இரண்டாவது குழந்தையின் ஃபோட்டோ வரலாம். அப்போது நான் சொன்ன விஷயம் மறந்திருக்கும்.

அதனால் என்ன இப்போ?

.

Saturday, May 22, 2010

'அன்புடன்' எழுதியவர்கள்


அனுராதா ரமணன் மறைந்துவிட்டார்.

மலர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 10 நாட்களுக்கும் மேலாக இருந்திருக்கிறார். எத்தனையோ சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள் எழுதிப் புகழ் பெற்றவர்.
 

நான் இவரது எழுத்துக்களை படித்தது வார இதழ்களில். தனி நபர்களின் பிரச்சனைகளுக்கு நடைமுறை சாத்தியங்களில் பதில் அளிப்பார். சில வினோத பிரச்சனைகளை பார்த்து நான் மலைத்தது உண்டு. அதற்கு இவரது பாணியில் தெளிவான பதில் இருக்கும். வாரமலரில் வந்துகொண்டிருக்கும்  'அன்புடன் அந்தரங்கம்' பெண்களிடம் அவ்வளவு பிரசித்தம்.

இவரது பல நாவல்கள் திரைப்படமாக வந்திருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்குச் செய்து வந்த அவர், இறந்த பிறகும் தன் கண்களைத் தானமாக வழங்கி, இருவருக்கு ஒளியூட்டியிருக்கிறார்.

இவரது ரசிகர் ஒருவர் இப்படி பகிர்ந்திருக்கிறார். பார்க்க அற்புதமனுஷி அனுராத ரமணன் க்ளிக்கவும்.
 
************
 
28.4.2010 அன்று எழுதப்பட்ட இந்தக் கடிதம் தமிழ்நாட்டின் எல்லாப் பத்திரிகைகளாலும் நிராகரிக்கப்பட்டு மலையாள வாரப் பத்திரிகையான கலா கௌமுதியில் கவர் ஸ்டோரியாக வெளிவந்துள்ளது.
 
 
 

ஏ.ஆர். ரஹ்மானுக்கு சாரு நிவேதிதா எழுதியது. உங்கள் கருத்தென்ன?  படித்துவிட்டு சொல்லவும்.

Sunday, May 9, 2010

ஒரு கவிதை, ஒரு கதை, ஒரு நிஜம்

அவசரங்களில் நாம் கடந்துவிட்ட எத்தனையோ மனிதர் போல்தான் இவர் இருக்கிறார்.

'புத்தம் சரணம் கச்சாமி' என
பூசை செய்து வணங்கிவிட்டு
ரத்தம் மரணம் துச்சாதனம் செய்யவா
நித்தம் அவனை வணங்குகின்றாய்
நெஞ்சு வெடிக்குதடா ஈழா

என்பதுதான் 1983-ல் நடந்த ஈழப் படுகொலையை குறித்த, பிரசுரமான முதல் கவிதை.

இவரது பேட்டியை சமீபத்தில் படித்தேன். இனிய உதயத்தில் வந்திருக்கிறது.

நவீன தமிழ்க்கவிதையில் கவனத்தில் கொள்ளத்தக்க பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர் பால்நிலவன். மரபுக் கவிதையில் ஆரம்பித்த இவரது கவிதை பயணம். ஒரு கட்டத்தில் சிறுகதையில் முழுமையாக மையம் கொண்டது.

 இவரது கதை ஒன்று, 'கோவில் ஜமுக்காளம்'.

"ஊருக்குப் பொதுவாக உள்ள கோவில் ஜமுக்காளத்தை எல்லார் வீட்டு விசேஷத்திற்கும் மாட்டுவண்டியில் எடுத்துச் செல்லும் மண்ணாங்கட்டி, அடுத்தவாரம் நடைபெற இருக்கும் தன் வீட்டு விசேஷத்திற்கு வீட்டில் தங்கையும் அம்மாவும் கேட்கச் சென்னார்களே என்று கேட்கிறான். அவன் இப்படி கேட்டதை அறிந்து அந்தப் பண்ணையார் கோவில் திருவிழாவில் ஊர் மக்கள் மத்தியில் திட்டி வேலையை விட்டே துரத்திவிடுகிறார். திருவிழா இரவன்று, அந்த கோவிலில் நடைபெறும் பாட்டு கச்சேரி கேட்க வசதியாக கோவில் ஜமுக்காளம் விரிப்பட்டு மக்கள் அமர்கிறார்கள். அதில் அமர விரும்பிய ஒரு ஏழைச் சிறுவனையும் கோயில் குருக்கள் அடித்து விரட்டுகிறார்கள். பிறகு மடித்து வைக்காமலேயே கலைந்த வாக்கில் ஓரமாக எடுத்துப் போட்டுவிட்டு எல்லோரும் போய்விடுகிறார்கள்.

கோவில் ஜமுக்காளம்தான் தன் வேதனையான இந்தக் கதையைச் சொல்லி வருகிறது. உழைக்கும் வர்க்கம் உட்காரத் தகுதியற்ற எனக்கெதற்கு இந்த வாழ்வு என ஏங்கித் தவிக்க, திருவிழா வளாகத்தில் நடைபெறும் வாணவேடிக்கையிலிருந்து வந்து விழுந்த பட்டாசு ஒன்றின் நெருப்புப் பட்டு, 'இதோ நான் சந்தோஷமாகச் சாம்பலாகிறேன்' என அக்கதை முடியும்."

அடிப்படையில் இவர் ஒரு நிலச்சுவாந்தார் குடும்பத்தில் பிறந்தவர். இந்த அடிப்படையில் கதையைப் பார்க்கும் போது, நம்மை வேறு தளத்திற்கு கூட்டிச் சென்று யோசிக்க வைக்கிறார்.

இவரது மூன்று சிறுகதை தொகுப்புக்களும்; 'ரயில் வரும் வரை' (2003) என்ற கவிதைத் தொகுப்பும் வெளியாகி உள்ளன. விழுப்புரம் மாவடத்தில் 21 வயது கிராம வாழ்க்கைக்குப் பிறகு, வேலை நிமித்தமாக சென்னையில் வசித்து வருபவர்.

வாழ்க்கை துரத்தியதில், 1995 ஆகஸ்டிலிருந்து 2003 நவம்பர் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி என் பி எஸ் சி) அலுவலகத்தில் எட்டரை ஆண்டுகள் தினக்கூலியாகப் பணியாற்றினார். நாள் ஒன்றுக்கு 51 ரூபாய் என்று மாதத்தில் 22 நாள்தான் வேலை இருக்கும்.
அதிலும் பொங்கல், பூசை என்று விடுமுறைகள் வரிசையாக வந்துவிட்டால் 18, 19 நாட்கள்தான். இது கிராம வாழ்க்கையில் அல்ல. அறை வாடகை கொடுக்கவும், சரியாகச் சாப்பிடவும் முடியாமல் அல்லாடும் மாநகர வாழ்க்கையில்தான்.

தமிழக அரசின் துறை ஒன்றில், தட்டச்சர் பணியும் செய்திருக்கிறார். 1990 முதல் 1993 வரை மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வேலை பறிக்கப்பட்டது. பணி நீக்க உத்தரவிற்குப் பின்னால் இவர் எழுதிய 'தட்டச்சு நிமிடங்கள்' கதை காரணமாக இருந்தது. சென்னை தலைமை அலுவலகச் சூழல் பற்றியது.
இந்த வருத்ததில் அடிக்கடி உடல் நலம் குன்றி சில மாதங்களில் மாரடைப்பில் அம்மாவின் மரணம். பொதுவாக பெற்ற தாயின் இயற்கையான மரணத்தையே எந்த உயிராலும் தாங்க முடியாது. செல்ல மகனின் நிலை கண்டு அம்மாவின் மரணம் இருந்தால்.... சட்டென்று வீழ்ந்த ஸ்தல விருட்சம்போல் வாழ்க்கைப் பாதை சிதறுண்டு போனது.

இப்போது அருமை நண்பர்களால், பல்வேறு ஊடகங்களில் பணியாற்றுகிறார். உலக சினிமா, மொழிபெயர்ப்பு என உற்ச்சாகமாக இயங்கி வருகிறார்.

அவசரங்களில் நாம் கடந்துவிட்ட எத்தனையோ மனிதர் போல்தான் இவர் இருக்கிறார்.

இனி, அப்படி கடந்துவிடாதீர்கள்.

Friday, May 7, 2010

பார்த்து போங்ங்....க

(படத்தை க்ளிக் செய்யவும்)


அப்ப்பாஆஆஆ.........
இந்த வாரம் அதிர்ச்சி அடைய வைத்த விளம்பர படம்.

Saturday, April 17, 2010

தடை எதற்கு

சர்ச்சையின் இன்னொரு அவதாரமாகவே ஆகிவிட்டது யூலிப் பாலிசிகள்!
இதுவும் போன வார கூத்துதான்.

ஒருபக்கம் இந்தவகையான பாலிசிகள் இன்ஷூரன்ஸா அல்லது முதலீடா என்ற பட்டிமன்றங்கள், இன்னொரு பக்கம் பங்குச் சந்தை சார்ந்த இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது லாபமா, இல்லையா என்ற வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன...

இதற்கிடையில் யூலிப் பாலிசிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்று செபி, ஐ.ஆர்.டி.ஏ. இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அடுத்தகட்டமாக நீதிமன்றத்தின் படிகளை ஏறப் போகிறது. இந்த இரு நிறுவனங்களில் யார் சொல்வது சரி என்பது குறித்து விவாதமே தேவையில்லை. காரணம்.....

காரணம் பார்பதற்கு முன்பு புதியவர்களுக்காக ULIP, SEBI, IRDA அப்படின்னா என்னவென்று சுருக்கமாக பார்த்துவிடலாம்.

SEBI -'செபி' என்பது பங்கு சந்தை சார்ந்த அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பு. IRDA - 'ஐ.ஆர்.டி.ஏ.' இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியம். ULIP - 'யூலிப்' என்பது ஒரு வகையான இன்ஷூரன்ஸ் திட்டம் தான். இதில் செலுத்தும் தொகை பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவுக்கு யூலிப் பாலிசிகள் வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இரு ரெகுலேட்டர்களும் நிதியமைச்சகத்தின் கீழ்தான் வருகின்றன. அறிமுகம் போதும்.


யூலிப் பாலிசிக்காக ஐ.ஆர்.டி.ஏ-விடம் அனுமதி வாங்கிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், அவற்றை பங்குச் சந்தையில் முதலீடு செய்தபோதும் செபியிடம் எந்த அனுமதியையும் வாங்கவில்லை. இதுநாள்வரை அமைதியாக இருந்துவிட்டு இப்போது விழித்து தாம்தூம் என்று குதித்தபடி தடை சொல்லியிருக்கிறது செபி. ஆனால் ஐ.ஆர்.டி.ஏ. தன்னுடைய உரிமையை பங்குபோட்டுக் கொள்ள விரும்பவில்லை! யூலிப் பாலிசிகளுக்கு செபியின் அனுமதி தேவையில்லை என்று ஐ.ஆர்.டி.ஏ. கருத்து தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னையில் தலையிட்டு முடிவு சொல்ல விரும்பாத மத்திய அரசாங்கம், உங்களில் யார் சொல்வது சரி என்பதை நீதிமன்றத்துக்குச் சென்று முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது.

இனி காரணம், யூலிப் பாலிசிகளில் மக்கள் போடும் பணத்தில் 80% - 90% பங்கு மற்றும் நிதிச் சந்தையில்தான் முதலீடு செய்யப்படுகிறது என்கிறபோது, தங்களைக் கட்டுப்படுத்த செபிக்கு அதிகாரமே இல்லை என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எப்படிச் சொல்ல முடியும்? யூலிப் பாலிசிகள் நல்ல இன்ஷூரன்ஸ் திட்டம் அல்ல என்பதே நிதி வல்லுனர்களின் கருத்து; சிறப்பான முதலீட்டுக் கருவியும் அல்ல. இந்த உண்மை தெரியாத சாதாரண மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை அதில் கொண்டு போய் கொட்டி, குறைந்த லாபத்தையே கண்டிருக்கிறார்கள்.

இப்போது, யூலிப் பாலிசிகளை விற்க 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது செபி விதித்திருந்த தடை தற்காலிகமாக நீங்கியிருக்கிறது. இந்தத் தடை நீக்கம் மட்டும் வராமல் போயிருந்தால் இந்த 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் பங்குச் சந்தையில் போட்ட 75 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக திரும்ப எடுத்துவிடலாம் என்று நினைத்ததாம்.

அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் சந்தை மிகப் பெரிய சரிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும். இப்போதைக்கு அந்த பயம் இல்லை என்றாலும், இது தலைக்கு மேல் தொங்கும் கத்தி மாதிரிதான்.

அரசாங்கத்துக்குத் தேவை யூலிப் பாலிசிகள் மூலம் பங்குச் சந்தைக்கு வரும் பல ஆயிரம் கோடி ரூபாய்தான். அதனால் மக்களுக்கு என்ன நன்மை என்பது பற்றி அது கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. பொறுத்திருந்து பார்போம்.

இரு சம்பவங்கள் - சானியா மிர்ஸா

போனா வாரம் நம்மை கடந்து சென்ற இரு சர்ச்சைகுரிய சம்பவங்கள். முதலாவது சானியா மிர்ஸா திருமணம், இரண்டாவது யூலிப் பாலிசிகளை விற்க 14 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது செபி விதித்திருந்த தடை. முதலாவது, சொந்த விஷயம் பொது பிரச்சனையானது. இரண்டாவது, பொது பிரச்சனை நமக்கான சொந்த விஷயம்.

சானியா மிர்ஸாவின் புகைப்படத்தை எரித்ததாக மதுரையில் 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. விஸ்வ இந்து பரிஷத் தும் மற்றும் பல இந்து பரிவார அமைப்புகளும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே, தன்னுடைய பத்திரிகையில் சானியாவை தாக்கி கடுமையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். 'ஒரு பாகிஸ்தானியரை திருமணம் செய்துகொள்ளும் சானியா, இனிமேல் எப்படி இந்தியாவுக்காக விளையாடுவார்?' என்ற கேள்விகளை இந்துத்துவ அமைப்புகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

சானியா மிர்ஸா இந்தியாவுக்கு புகழ் தேடித் தந்த ஒரு விளையாட்டு வீராங்கனை. தனது 18 வயதிலேயே விளையாட்டுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாக மதிக்கப்படும் அர்ஜுனா விருதையும், 17 வயதிலேயே சர்வதேச கவனத்தைப் பெற்றார். மிகவும் சோர்ந்து கிடந்த இந்தியாவின் விளையாட்டுத் துறையை அவரது வருகை ஊக்கம் பெற வைத்தது. உலக அளவில் அமெரிக்க மற்றும் ரஷ்யப் பெண்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த சானியா நுழைந்து கலக்கியது நமக்கு பெருமையைத் தந்தது.

சானியாவின் வெற்றி அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, சர்ச்சைகளையும் கொண்டு வந்தது.குட்டைப் பாவாடை அணிந்துகொண்டு விளையாடுவது மத விரோதம் என்று சிலர் கண்டனம் தெரிவிக்க, அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பல இடங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன. வேறு வழியின்றி அவர் வேறுவிதமான உடையை அணிந்தார். அவர் அமர்ந்திருந்தபோது எதிரே இருந்த தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார் என்று அவர்மீது குற்றம் சாட்டினர். அவர் தனது தேசபக்தியை கண்ணீர் மல்கவெளிப்படுத்திய பிறகே... சர்ச்சைகள் கொஞ்சம் நின்றது.

சானியா இந்தியராக மட்டுமே பார்க்கப்பட்டிருந்தால் இவ்வளவு சர்ச்சைகள் எழுந்திருக்காது. அவரை ஒரு பெண்ணாகவும், அதுவும் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த ஒருவராகவும் பார்க்கின்ற காரணத்தினால்தான் இந்தப் பிரச்னைகள் எல்லாம் எழுந்துள்ளன. இந்தியாவில் விளையாட்டுத் துறை வளர்ச்சி அடையாததற்கு இத்தகைய பிற்போக்குத்தனமான பார்வையும் ஒரு காரணம். இந்தியர்கள் தமது தேச பக்தியை வெளிப்படுத்திக்கொள்ள எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது, மத்திய அரசால் கொண்டு வரப்படும் அணுசக்தி நஷ்டஈடு மசோதா இந்திய இறையாண்மைக்கே எதிரான ஒன்றாகும். நமது நாட்டை அமெரிக்க தனியார் நிறுவனங்களின் நலன்களுக்காக அடகு வைக்கிற முயற்சி இது. ஆனால், இந்தியாவின் அரசியல்வாதிகள் அல்லது சங் பரிவாரங்களோ இந்த மசோதாவை எதிர்த்து வீதிகளில் இறங்கிப் போராட முன்வரவில்லை. சானியாவுக்கு எதிராக முஷ்டியை உயர்த்திக்கொண்டு நிற்கும் அரசியல் தலைவர்கள் இந்த மசோதாவைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதற்கு முன்பு அமெரிக்காவோடு அணுஆயுத ஒப்பந்தம் செய்ததைப் பற்றியும் இந்த பரிவாரங்கள் தூங்கிக் கொண்டுதான் இருந்தன. இந்தியாவின் அதிகபட்ச தேசபக்தி தங்களிடம்தான் இருக்கிறது என்று உரிமை கொண்டாடும் இவர்கள், இந்திய இறையாண்மை பாதிக்கப்பட்ட நேரங்களில் எங்கே போயிருந்தார்கள்?

மாலிக்கை திருமணம் செய்துகொண்டால் சானியா பாகிஸ்தானிய பிரஜையாக மாறிவிடுவார் என்று இந்துத்துவவாதிகள் கூறுகின்றனர். ஆனால், திருமணத்துக்குப் பிறகு தாங்கள் துபாய்க்கு குடியேறப்போவதாக மாலிக்கும், சானியாவும் கூறியுள்ளனர்.பாகிஸ்தானியரை மணந்துகொண்ட ஒரு பெண் எப்படி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று தமது குதர்க்கவாதத்தை அவை எழுப்புகின்றன.

இதுவும்கூட புதிய விஷயமல்ல... ஒரு நாட்டில் பிறந்தவர் இன்னொரு நாட்டுக்காக விளையாடுவது என்பது நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருந்து வருகிற ஒன்றுதான். கிரிக்கெட்டிலும், டென்னிஸிலும் அப்படி ஏராளமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஒருவேளை துபாய்க்குச் சென்று அங்கே அந்த நாட்டின் பிரஜையாக சானியா மாறிவிட்டாலும்கூட அவர் விரும்பினால் நமது அரசும் ஒப்புக்கொண்டால் அவர் இந்தியாவுக்காக விளையாடுவதில் சிக்கல் எதுவும் இருக்கப்போவதில்லை.

எதற்காக இந்தப் பிரச்னை குறித்து இவ்வளவு சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 'இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தேசப்பற்று இல்லாதவர்கள். அவர்கள் பாகிஸ்தானைத்தான் எப்போதும் தமது தாய் நாடாகக் கருதி வருகிறார்கள்' என்று சொல்லவே சில அமைப்புகள் விரும்புகின்றன. அதற்கு ஒரு சிறுவாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் நழுவ விடுவதில்லை.

பெரும் சர்ச்சைக்குப் பின் கடந்த 12-04-2010-ம் தேதி ஷோயப் மாலிக்-சானியா மிர்சா திருமணம் நடைபெற்றது. "எங்களது திருமணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைகளால் எங்களுக்கு எவ்வித பாதிப்பு எற்படவில்லை. திருமணதுக்கு முன் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளையும் மறந்து விட்டேன். பாகிஸ்தானியரை திருமணம் செய்யவில்லை; என் மனதை கவர்ந்தவரை திருமணம் செய்துள்ளேன்." என்று முத்தாய்பாக சொல்லியுள்ளார். அதுதான் சானியா மிர்சா.

நமது வாழ்துக்கள் எப்போதும் உண்டு.