Thursday, April 29, 2010

மழலைச்சொல்

நாம் அனைவரும் குழந்தைகள் பேசி கேட்டவர்கள் தாம். ஏன், நாமே குழந்தையாய் இருக்கும் போது நிறைய பேசி இருக்கிறோம். ஆனால், இப்போது போல் பகை வளர்க்க, புறம் பேச, புண்படுத்த, மறைத்து பேச, வீண் புகழ, அல்ல.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (குறள் 65)

அதாவது, குழந்தை தொட்டுப் பார்த்தால் உடலுக்கு இன்பம். அவர்கள் பேசுவதைக் கேட்டால் காதுக்கு இன்பம். இங்கு ஒரு குழந்தையை ஏன் சாப்பிடவில்லைனு கேட்டதுக்கு விளக்கமா பதில் சொல்லியிருக்காங்க.

குழந்தைகள் உலகின் எந்த மொழியில் பேசினாலும் புரிந்து கொள்கிறார்கள். எல்லாம் தெரிந்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் நாம் தான் பாவம், வாத்தியார் தேடிக் கொண்டிருக்கிறோம்.

சரி தானே?



குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

Thanks.
(Video Ref: Jayashree)