Thursday, May 6, 2010

கவிதையே தெரியுமா

பொன்னாடை

முன் மேடை
சம்பிரதாயங்கள்
நீண்டபடி இருக்க
ஒப்பனை அறையில்
உறங்குகிறது
ஆடவந்த குழந்தை!

செல்வேந்திரனை எனக்கு கவிதைகளில் தான் இன்று வரை பரிச்சயம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவரது கவிதைகள் விகடனில் வெளிவந்த போது நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். இவரது கவிதை தொகுப்பு ஏதேனும் வெளி வந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள்.

எனக்கு பிடித்த கவிதை 'விஷய ஞானம்'.