Wednesday, April 14, 2010

33 வது புத்தக சந்தை


இந்த புத்தக கண்காட்சிக்கு போயிருந்த போது மனசுக்கு ரொம்ப மகிழ்சியா இருந்தது. இங்கு எத்தனை பேர் வந்தாங்க, எவ்வளவு புத்தகம் விற்பனை ஆச்சு அப்படிங்கற விவரம் எல்லாம் தினசரி பத்திரிக்கையில வந்துகிட்டே இருந்தது. இந்த புள்ளிவிவர கணக்குகளை விட நிறைய பேர் ஆர்வமா வந்தது திருப்தியா இருந்தது. 

என் பங்குக்கு நண்பர்களை (வற்புறுத்தி) அழைச்சுட்டு வந்திருந்தேன். புத்தகம் படிக்கும் வழக்கம் இருப்பவர்கள் நான் கூப்பிட்டதும் வர தயாராயிருந்தனர். ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், ஆர்வம் இருந்து படிக்க நேரம் இல்லைனு சொல்றவங்களை வரவச்சு சில புத்தகங்களை பரிந்துரைச்சேன். புத்தகம் படிக்காதவர்களை கூட்டிட்டு போய் அங்க இருக்கற சூழ்நிலையை காண்பிச்சேன்.

ஒரு ஆர்வத்தையும் சின்ன சபலத்தை உண்டு பண்ணி அடுத்தடுத்து இங்க வந்தா போதும் ஏதோ ஒரு தூண்டில் விழுந்து விடும்.

இந்த முறை அம்மாவும் தங்கையும் கூட்டிட்டு போயிருந்தேன். நடிகர் கமல் ஹாசனை பார்த்து பரவசபட்டார்கள். 
நான் என்னென்ன வாங்கினேன்னு கேட்ட நண்பர்களுக்கு, இதோ அந்த விவரம்....

 பகுதி 1 
1.உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன், விஜயா பதிப்பகம், ரூ. 200
2.சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா, உயிர்மை பதிப்பகம், ரூ. 200
3.கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன், அன்னம் வெளியிடு ரூ.80, காலச்சுவடு பதிப்பகம் ரூ.150
4.சினிமாவுக்கு போகலாம் வாங்க! -முனைவர் கு.ஞானசம்பந்தன், விஜயா பதிப்பகம், ரூ. 75
5.இரவில் நான் உன் குதிரை (சில தேசங்களின் சில சிறுகதைகள்) -கட்டுரை - காலச்சுவடு  பதிப்பகம் ரூ.125
6.கிராமியக் கதைகள் - கி. ராஜநாராயணன், அகரம் வெளியிடு ரூ.70
7.புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம் - சுந்தரம் ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம் ரூ.80
8.அண்ணாவின் குட்டிக் கதைகள் - அறிஞர் அண்ணா, செல்லப்பா பதிப்பகம் ரூ.25
9.நகைச்சுவை -திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், குகஸ்ரீ வாரியர் பதிப்பகம் ரூ.22
10.அவ்வையார் பாடல்கள் (தமிழ் உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும்) -பேராசிரியர்  சு.ந.சொக்கலிங்கம், வானதி பதிப்பகம் ரூ.40
11.எளிய தமிழ் இலக்கணம் -டாக்டர் வை. தட்சிணாமூர்த்தி, திருவரசு புத்தக நிலையம் ரூ.50
12.பட்டினத்தார் பாடல்கள் -விளக்கவுரை திரு.வி.க. கங்கை புத்தக நிலையம் ரூ.70

2 comments:

P R I Y A S said...

ivlo book vaanginaya...unakku ITla irundhuttu books padikka time eppo kedaikudhu???

Surendhar said...

அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. படிக்கறதுக்காகவும் நேரம் ஒதுக்கனும்னு தோன்றினால் போதும்.நேரத்தை கொஞ்சம் போல adjust செஞ்சிக்கிறேன்.